செய்திகள் :

Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!

post image

இதுவரை உக்ரைன் போரினால் அமெரிக்காவும், ரஷ்யாவும் முட்டி மோதிக்கொண்டிருந்தன. இப்போது வெனிசுலா விஷயத்திலும் இந்த இரு நாடுகள் மோதிக்கொள்ள தொடங்கியுள்ளன.

என்ன பிரச்னை?

நேற்று கரீபியன் கடல், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா. இந்த இரண்டு கப்பல்களும் முன்பு வெனிசுலாவிற்கு கீழ் இருந்து வந்தது.

இதனால், இந்தக் கப்பல்களில் வெனிசுலாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கொண்டுவரப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

மரினேரா

இரண்டு கப்பல்களில் மரினேரா என்கிற எண்ணெய் டேங்கர் கப்பலால் தான் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.

முன்பு பெல்லா 1 என்று அழைக்கப்பட்ட மரினேரா கப்பல் கடந்த டிசம்பர் மாதம், ரஷ்யாவின் கீழ் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, இந்தக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய போது, மரினேரா கப்பலில் ரஷ்ய கொடி பறந்துகொண்டிருந்தது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்போக்கை உண்டாக்கி உள்ளது.

மரினேரா கப்பலை அமெரிக்கா சட்டென கைப்பற்றிவிடவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக, அந்தக் கப்பலை அமெரிக்கா தொடர்ந்து ட்ரேக் செய்து வந்துள்ளது.

இதையறிந்த ரஷ்யா தங்களது கப்பல் படையால் அந்தக் கப்பலை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. இந்தப் பாதுகாப்பையும் மீறி அமெரிக்கா மரினேராவைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்கா என்ன சொல்கிறது?

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பிரிவு, "உலகம் எங்குமே வெனிசுலாவின் எண்ணெய்க்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதனால், அமெரிக்காவின் தடையை மீறிய இந்தக் கப்பல் ட்ரம்ப் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

Reuters செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, கப்பலைக் கைப்பற்றியதும் முதலில் எண்ணெய் டேங்கர் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தே, அமெரிக்காவின் நோக்கம் என்ன(எண்ணெய்)வென்று புரிந்துவிடுகிறது.

ரஷ்யா
ரஷ்யா

ரஷ்யாவின் எதிர்ப்பு

மரினேரா கைப்பற்றலைப் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, "அந்தக் கப்பலில் இருந்த அனைத்து ரஷ்ய குடிமகன்களும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பலை இன்னொரு நாடு கைப்பற்றுவதற்கு எந்த உரிமையும் இல்லை" என்று பதிவு செய்துள்ளது.

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க