செய்திகள் :

Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!

post image

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Messi: G.O.A.T India Tour

ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம்.

பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

இதுகுறித்த அவரது பதிவில், "டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Revanth Reddy Football Practice
Revanth Reddy Football Practice

ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி.

கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர்.

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்... மேலும் பார்க்க

``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம்" - கேரம் வீராங்கனை காசிமா

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"10-வது தான் படிச்சிருக்கேன்; வீடு இல்ல" - கேரம் உலக சாம்பியன் காசிமேடு கீர்த்தனா அரசிடம் கோரிக்கை

7-வது கேரம் உலகக் கோப்பை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை மாலத்தீவில் நடைபெற்றது.இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்... மேலும் பார்க்க

``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ... மேலும் பார்க்க

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி... மேலும் பார்க்க