செய்திகள் :

NEET: 'மாபெரும் உயிர்கொல்லும் Scam'- தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி தற்கொலை; உதயநிதி இரங்கல்

post image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கோபிகா என்ற மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்த அவர், இந்த ஆண்டும் தேர்வை எதிர்கொண்டிருந்தார். எனினும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் மறுத்தேர்வு - மாணவி தற்கொலை
நீட் மறுத்தேர்வு - மாணவி தற்கொலை

இதனால் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றத்தாலும், மீண்டும் தேர்வை எதிர்கொள்வதில் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் கோபிகா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவிக்கு இரங்கல் தெரிவித்து நீட் தொடர்பாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

"போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களையும், உயிர்களையும் இழந்துள்ளோம்"- ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு | Live Updes

ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

"முதிர்ச்சியற்ற செயல்" முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கேரள காங்கிரஸ் எம்.பி!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் கருத்துக்கு முரண்பட்ட நிலையில் கேரளம் இருந்துவருகிறது. கேரளத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியுடன் த.வெ.க ஆட்சி நட... மேலும் பார்க்க

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' - CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார். இணைப்பிற்குப் பிறகு, "சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்" என்று பேசியிருந்தார். தவெகவில் சி.மகேந்த... மேலும் பார்க்க

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! - MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வகை பேருந்துகளில் மிகக்குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்களே பயணிப்பது, இந்தத் திட்டத்தை முற... மேலும் பார்க்க

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப். அந்தப் பேட்டியின் ஒரு ... மேலும் பார்க்க

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெ... மேலும் பார்க்க