செய்திகள் :

Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்..." - நடிகர் அங்குர் ரத்தன்

post image

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளத்தினால் மக்கள் தங்கள் உறவினர்களையும், உடமைகளையும் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு

இந்நிலையில் இந்தப் பேரழிவு நடப்பதற்கு வெறும் 16 மணி நேரத்திற்கு முன்பாகத்தான், நடிகர் அங்குர் ரத்தனும் அவரது குடும்பத்தினரும் வெள்ளம் அடித்துச் சென்ற பகுதியில் நின்று புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட பயணத் தொலைவில் இருந்த ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கின்றனர். வெள்ளம் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு,பாதுகாப்பான நகரத்திற்குச் சென்றதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் அங்குர் ரத்தன், "கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தோம். நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு வெள்ளம் வந்த அந்த இடத்தில்தான் இருந்தோம் என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

அங்குர் ரத்தன்
அங்குர் ரத்தன்

நானும், என் மனைவியும் அங்கு நின்றுதான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து 10-15 நிமிட தொலைவில்தான் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்தது.

எங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் உயிர்தப்பிவிட்டோம். உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Nepal Flood: "என் மனைவி பாதுகாப்பாக இருக்காங்க" - வெள்ளத்தில் சிக்கியிருக்கும் சிவரஞ்சனியின் கணவர்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில... மேலும் பார்க்க

நேபாள வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி; 100 பேர் மாயம்; இந்தியர்களின் நிலை என்ன? | Latest Update

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் போடேகோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் திபெத் திசையிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்?

நேபாளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, கண்டக் நதியின் நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பீகார் அரசு கரையோர மாவட்டங்களுக்கு ... மேலும் பார்க்க

Nepal: "கண்முன்னே ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது” - கலங்கிய கும்பகோணம் ஏஜென்ஸி உரிமையாளர்

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி பயணிகளை சுற்றுலா அழைத்துச் சென்று வரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தச் சுற்றுலா ஏஜென்சிஸ் மூலம் தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், கும்பகோணம்,... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 8 பேர் பலி; 30க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகியிருக்கின்றனர். மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் வெள்ளப்ப... மேலும் பார்க்க

கொலம்பியா: 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலியான சோகம்

மேற்கு கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கொலம்பியாவின்... மேலும் பார்க்க