செய்திகள் :

மதுரை: மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற மகன்; அடித்துக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்

post image

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50). இவரது கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் அய்யம்மாள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று தனது மகனைக் கொன்று விட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அளித்த புகாரில் கருப்பாயூரணி காவல்துறையினர் அய்யம்மாளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது மகன் ராஜா மதுபோதையில் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து ஆபாசமாகப் பேசி தாக்கியதோடு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

மேலும் மகன் ராஜா தொடர்ந்து தன்னைத் தாக்க முயன்றபோது மதுபோதையில் இருந்த மகன் ராஜாவைக் கீழே தள்ளிவிட்டு கீழே கிடந்த கம்பியை எடுத்து அவனது தலை, கை மற்றும் உடல் முழுவதும் மாறி மாறி அடித்து கொன்றுவிட்டேன். இதையடுத்து ராஜாவின் உடலைத் தனது வீட்டில் பாத்ரூம் கட்டுவதற்காக வீட்டின் இடதுபுற வாசல் அருகே தோண்டிவைத்திருந்த குழியில் ராஜாவின் உடலைப் புதைத்து மூடி அதன் மீது விறகுக் கட்டைகளை வைத்து மறைத்து விட்டேன்” எனத் தெரிவித்தார்,

தொடர்ந்து காவல்துறையினர் அய்யம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் இன்று ராஜாவைப் புதைத்த இடத்தில் உடலை வருவாய்துறை அதிகாரிகள் முன்பு உடற்கூராய்வு நடத்தப்படவுள்ளது.

மகனைக் கொன்றதாகக் கூறிய அய்யம்மாள் சில நாள்களாக அண்டை வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மகன் இல்லை எனவும் புலம்பிவந்துள்ளார். இந்த விவகாரம் ஊர் முழுக்க தெரியவந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று அய்யம்மாள் தனது மகனைக் கொலை செய்து புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மதுரையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகனை அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டின் பின்புறம் புதைத்து வைத்து மூன்று மாதமாக மறைத்து வீட்டிலேயே தங்கியதாக தாயார் அளித்த வாக்குமூலம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!

ஹரியான பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் (32) உத்தரப்பிரதேசத்தில் ஜிம்மிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாம்லி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி என்ற நகரில் உள்ள ஆர்யபுரி ... மேலும் பார்க்க

திருச்சி: ரயில்வே பாதுகாப்பு படையின் முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் திடீர் மரணம்

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர், ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( 70). இவர், ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர... மேலும் பார்க்க

"செல்போன் டவர் வைக்க ரூ.15 லட்சம் தரோம்; ஆனா..." - தொழிலாளரிடம் ஆன்லைன் மோசடி; என்ன நடந்தது?

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை; 22 வயது இளைஞர் கைது

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். பின்னர், அந்தச... மேலும் பார்க்க

திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் திடீரென்று செல்போனைக் கீழே போட்டுவிட்டு, அ... மேலும் பார்க்க