செய்திகள் :

Nigeria: ``ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் முக்கிய தளபதியை வீழ்த்திவிட்டோம்" - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

post image

அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நைஜீரிய அரசு நீண்டகாலமாகவே போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் பிராந்தியக் கிளைகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. அத்துடன், அங்குள்ள வன்முறைக் கும்பல்களுக்கு எதிராகவும் அந்நாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நைஜீரியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நைஜீரியாவின் வடமேற்கு சோகோடோ (Sokoto) மாகாணத்தில் அண்டை நாடான நைஜரில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் நைஜீரியாவும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அதன் தொடர்ச்சியாக, நைஜீரியப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும் ஆதரவு வழங்கவும் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``அமெரிக்கப் படைகளும் நைஜீரியப் படைகளும் இணைந்து திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கையை மிகச் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். உலகிலேயே மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் இதன் மூலம் ஒழிக்கப்பட்டிருக்கிறார். ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்த அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் பதுங்கியிருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அவரது நடமாட்டங்களை அமெரிக்க உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்து வந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அவரது மறைவு ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய இயக்கத்திற்குப் பேரடியாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வந்த இந்த பயங்கரவாதி, இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடவோ முடியாது. மேலும், இந்தச் சிக்கலான ராணுவ நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரிய அரசுக்கும் அதன் ராணுவத்திற்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொல்லப்பட்ட அபு-பிலால் அல்-மினுகி, ஐஎஸ் அமைப்பின் நிதி மற்றும் செயல்பாடுகளை உலகளவில் ஒருங்கிணைக்கும் நிர்வாகக் குழுவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பதால், கடந்த 2023-ம் ஆண்டிலேயே இவரை 'உலகளாவிய பயங்கரவாதி' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. மேலும், பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது. இருப்பினும், தற்போதைய தாக்குதல் வான்வழியாக நடத்தப்பட்டதா அல்லது தரைவழித் தாக்குதலா என்பது குறித்த கூடுதல் விவரங்களை அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை.

நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்தெந்த துறை?

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்போது, 'இலாகா' இல்லாத அமைச்சர்களாக 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஐந்து நாள்கள் கழித்து, இப்போது யாருக்கு எந்தத் துறை என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” - பதவியேற்பு விழா எப்போது?

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது பேருக்குமான துறைகள் ஒதிக்கீடும் அப்போத... மேலும் பார்க்க

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய... மேலும் பார்க்க

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறி... மேலும் பார்க்க

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" - தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்... மேலும் பார்க்க

`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ஐ.லியோனி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் ... மேலும் பார்க்க