செய்திகள் :

Operation Toofan-காக கேரளத்தில் ஒன்றிணையும் விஜய், மோகன்லால்; கேரள முதல்வரின் திட்டம் என்ன?

post image

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு ஆப்பரேஷன் தூஃபான் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பையும் நாடிவருகிறது கேரள அரசு. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று சென்னையில் சந்தித்தார்.

அதுகுறித்து ரமேஷ் சென்னிதலா தனது முகநூலில் பகிர்ந்துள்ள பதிவில், "போதைப்பொருள் மாஃபியாவிற்குக் கடுமையான அதிர்ச்சியை அளிக்கும் வகையில் 'ஆபரேஷன் தூஃபான்' தீவிரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுடன் இரு மாநிலங்களின் போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

நமது 'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். ​இரு மாநிலங்களும் இணைந்து செயல்படும் என்றும், ரகசியத் தகவல் பரிமாற்றம் மற்றும் எல்லைப் பகுதி ரோந்துப் பணிகளைக் கூட்டாகக் கையாள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் வேர்களை அறுத்தெறிய இனி நம்மோடு தமிழ்நாடு அரசும் இருக்கும். கேரளாவின் பரிசாக, தகழியின் "கயர்" (கயிறு) என்ற புகழ்பெற்ற காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறேன், நமது இந்த வரலாற்றுப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் விரைவில் கேரளாவிற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். ​

'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக கேரளாவிற்கு வருகை தரும் அவரை இருகரம் கூப்பி அன்போடு வரவேற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்
ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்

மேலும், கேரளா திரும்பிய ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் அரை மணி நேரத்துக்கும் மேல் சந்திப்பு நடந்தது. ஆபரேஷன் தூஃபானுக்கு அவர் முழு ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் உயர் அதிகாரிகளுடன் இது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கேரளா தமிழ்நாடு எல்லைகளை முழுமையாக காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரவும், பரஸ்பரம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதில் தீர்மானிக்கப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்

கேரளாவில் ஆபரேஷன் தூஃபான் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் மோகன்லால் உள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக கைகோர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் நான் கேரளத்திற்கு அழைத்துள்ளேன். மோகன்லாலும் விஜய்யும் ஜில்லா என்ற சினிமாவில் சேர்ந்து நடித்துள்ளார்கள். எனவே, மோகன்லாலும் விஜய்யும் கலந்துகொள்ளும் வகையில் போதைப்பொருளுக்கு எதிராக எர்ணாகுளத்தில் அடுத்தமாதம் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

போதைப்பொருள் எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் பங்கெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நம்முடன் கைகோர்ப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு போலீஸும் கேரளா போலீஸும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப்பொருளுக்கு எதிதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.... மேலும் பார்க்க

"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத... மேலும் பார்க்க

`தவெக புதிய தொழிற்சங்கம்; நீண்ட கால ரசிகரை தலைவராக்கும் முதல்வர் விஜய்?' - திட்டத்தின் பின்னணி!

திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகளை போல தவெகவுக்கும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர் விஜய். இந்த தொழிற்சங்கத்தின் தலைவராக தனது நீண்ட நாள் ரசிகர் ஒருவரின் பெயரையும் விஜய் டிக் அடித்... மேலும் பார்க்க

`இரானின் துருப்புச்சீட்டு' - போர் நிறுத்த மீறல்களும், மீண்டும் வெடித்த இரான் அமெரிக்க மோதல்களும்!

மேனாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன். கட்டுரையாளர் : மணிவண்ணன் திருமலை இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய `ஜூன் 17 போர் நிறுத்தப் புரிந்துணர்வு' ஒப்பந்தம் ஏற்பட்டு சற்றே... மேலும் பார்க்க

Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் ஆகும். இங்கே தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இ... மேலும் பார்க்க

கட்சி தாவ தயாராகும் தேனிக்காரர் டு `அய்யாவை சந்திக்க முடியவில்லை' பா.ம.க சர்ச்சை! | கழுகார்

பா.ம.க-வில் வெடிக்கும் சர்ச்சை!"அய்யாவை சந்திக்க முடியவில்லை..."பா.ம.க-வில் தந்தையும் மகனும் இணைந்துவிட்ட நிலையில், 'ஜி.கே.மணி, சேலம் அருள் உள்ளிட்ட ஒரு சிலரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதில்லை'... மேலும் பார்க்க