செய்திகள் :

Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேயன்

post image

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதியை 10 தேதிக்கு ப்ரீபோன்ட் செய்தனர்.

Parasakthi
Parasakthi

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர்.

தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த காணொளியை பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள்.

அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், "எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் 'சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது.

இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன்.

இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது.

மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்!

நம் மண், மொழி சார்ந்த படம் இது. 'பராசக்தி' முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு.

இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும்." எனக் கூறியிருக்கிறார்.

Jana Nayagan: "'ஜனநாயகன்' படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம்" - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர... மேலும் பார்க்க

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆக... மேலும் பார்க்க

"சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Sirai: "நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்" - 'சிறை' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர்... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது மோசமான ஆண்டு!" - எப்படி இருந்திருக்கிறது 2025 கோலிவுட்? | ஒரு பார்வை

ஆண்டின் இறுதி நாட்கள் வந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும், சினிமாவில் பல எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சற்று, இந்தாண்டின் சினிமாக்களையும் திரும்பிப் பார்த்தால், வருடந்தோறும் நிகழும் அத... மேலும் பார்க்க