செய்திகள் :

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்

post image

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு.

புதிய திட்டம் குறித்த விளக்கத்தை வினா-விடையாக இங்கே பார்க்கலாம்.

என்னது... இனி மாதத்திற்கு ரூ.1,800 மட்டும் தான் பி.எஃப் பிடித்தமா?

ஒருவருக்கு அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.15,000-க்கு தான் நிறுவனங்கள் பி.எஃப்பிற்காக 12 சதவிகிதம் பிடித்தம் செய்ய முடியும்.

பி.எஃப்
பி.எஃப்

அதாவது, மாதத்திற்கு ரூ.1,800 மட்டுமே கட்டாயப் பிடித்தம் செய்ய முடியும். அதற்கு மேல், செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் ஊழியரின் விருப்பப் பங்களிப்பாக (Voluntary) மட்டுமே கருதப்படும்.

இது புதிய திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிக முக்கிய மாற்றம் ஆகும்.

ஊழியர்கள் ரூ.1,800-க்கு மேல் பி.எஃப்பிற்கு பங்களிப்பு செய்தால், நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டுமா?

மேலே குறிப்பிட்டுள்ளது படி, ரூ.1,800-க்கு மேலான எந்தவொரு தொகையும் ஊழியரின் விருப்பப் பங்களிப்பு தான். அதனால், ஊழியர்கள் விருப்பப்பட்டு அதிகரிக்கும் பங்களிப்பிற்கு இணையாக நிறுவனங்களும் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

பி.எஃப்
பி.எஃப்

அப்போது இனி சம்பளத்தில் பி.எஃப் பிடித்தம் குறைக்கப்படுமா?

இந்தக் கேள்விக்கான பதிலை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முதல் உதாரணம்: ராஜா என்பவருக்கு ரூ.15,000 தான் அடிப்படை சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். புதிய சட்டத்தின் படி, ராஜாவிற்கு சம்பளத்தில் 12 சதவிகிதமான ரூ.1,800 பி.எஃப்பிற்காக பிடிக்கப்படும்.

அதனால், ராஜாவிற்கு பி.எஃப் பிடித்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இரண்டாவது உதாரணம்: ராமுவிற்கு அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்று வைத்துக்கொள்வோம். இந்த ரூ.30,000-க்கு அவரது நிறுவனத்தில் 12 சதவிகிதம் பி.எஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. அது ரூ.3,600.

ராமு ரூ.1,800-க்கு மேல் கொடுக்க விருப்பமில்லை என்றால், அவருக்கு இனி பி.எஃப் பிடித்தம் ரூ.1,800-க்கு குறைக்கப்பட்டு விடும்.

ஆக, இனி ரூ.15,000 அல்லது அதற்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.1,800 பி.எஃப் பிடித்தம் செய்யப்படும். அதற்கு மேலான, பி.எஃப் பிடித்தம் அவர்கள் விரும்பினால் மட்டுமே முடியும். விருப்பம் இல்லை எனில், அது சம்பளத்தில் சேர்த்து வரவு வைக்கப்படும்.

VB-GRAM (G) திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க புதிய நடைமுறைகள்; ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் ... மேலும் பார்க்க

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ - ஜூ.வி., ஆக்‌ஷன் ஸ்டோரி... மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட... மேலும் பார்க்க

சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.92-93 என வலுவான இந்திய ரூபாயின் மதிப்பு, இப்போது மீண்டும் ரூ.96-ஐ தாண்டி சறுக்கியுள்ளது. என்ன காரணம்? இந்தச் சறுக்கலுக்கு ஈர... மேலும் பார்க்க

'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்... மேலும் பார்க்க