செய்திகள் :

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

post image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.

நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது.

டிட்வா புயல் - கடல் சீற்றம்
டிட்வா புயல் - கடல் சீற்றம்

டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோயம்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதேபோல், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

`வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?

சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை.இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ப... மேலும் பார்க்க

நகராமல் அடம்பிடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கு 'ரெட் அலர்ட்'! - எப்போது வரை?

டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது. கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தா... மேலும் பார்க்க

சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தூரத்தில் நீண்டநேரம் நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் குறிப்பாக சென்னையில் கடந்த 10 மணி நேரத்த... மேலும் பார்க்க

சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கர... மேலும் பார்க்க

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்

வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆ... மேலும் பார்க்க