செய்திகள் :

RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" - வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

post image

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 250 என்ற இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது, இதனை விரட்டி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை விட 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி போட்டியில் தோல்வியைத் தழுவியது.

csk vs rcb match
csk vs rcb match

இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், "இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு மனநிறைவைத் தருகிறது. மைதானத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் பந்து சற்று பிடிமானம் இல்லாமல் தடுத்தது.

பில் சால்ட் மற்றும் விராட் பாய் விளையாடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது. அதன் பிறகு, டிம் டேவிட் விளையாடிய விதத்தை நான் எதிர்முனையில் நின்றுகொண்டு அவரது சிக்சர்களை ரசித்தேன்.

எனது எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. நான் களத்தில் இருக்கும் வரை, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பேன். அதே நேரத்தில், டிம் டேவிட் அங்கு இருந்தது என் அதிர்ஷ்டம்.

அவர் ஒரு மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் என்று நான் கூறுவேன். அவர் கடந்த ஆண்டும் இதைச் செய்துள்ளார். ஒரு பினிஷராக அவர் மிகவும், சிறப்பாக விளையாடுகிறார், நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, டஃபி அந்த அவுட் ஸ்விங்கர்களை வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்த விதம், எங்களை ஆட்டத்தில் முன்னிலைப்படுத்தியது. அதன் பிறகு, குருணால் பாண்டியா பந்து வீசி சர்ப்ராஸ் விக்கெட்டை வீழ்த்தியது ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்.

குருணால் பாண்டியா
குருணால் பாண்டியா

இறுதி ஓவர்களில், புவி மற்றும் அபினந்தன் யார்க்கர்களை வீசிய விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இடையில் ரொமாரியோ வந்து ஒரு ஓவரை வீசிய விதம், எங்கள் வீரர்களின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சியைக் காட்டுகிறது.

எங்கள் அணியில் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுயாஷ் வந்து அந்த நான்கு ஓவர்களையும் மிக அழகாக வீசியது சிறப்பாக இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, நான் அழுத்தத்தில் இருக்கும்போதெல்லாம் குருணால் பாண்டியாயைத் தான் தேடுவேன்.

அவர் எங்கே என்று பார்ப்பேன். அவர் மீது எனக்கு அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது. வரும் போட்டிகளைப் பொறுத்தவரை, அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்திற்காக அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறோம்"என்று பேசியிருக்கிறார்.

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

IPL: கிரிக்கெட் உலகை மிரளவைத்த அந்த `27' பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் 'ஒன் மேன் ஆர்மி' - யார் இவர்?

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதா... மேலும் பார்க்க