"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகல...
Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 2018-19 ரஞ்சி டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக விளையாடி பிரபலமானார்.
2023 ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இதற்கிடையில் தந்தையின் கிரிட்டிக்கலான நிலையைக் கேள்விப்பட்ட ரிங்கு சிங், சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 'சூப்பர் 8' போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து தற்காலிகமாக விலகினார்.
பின்னர் அவர் மீண்டும் அணியில் இணைந்த போதிலும், நேற்றைய ஆட்டத்தில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ``எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.



















