செய்திகள் :

மகனுக்கு எம்.பி பதவி; மனைவிக்கு தலைவர் பதவி - அஜித் பவார் மனைவி தேசியவாத காங்கிரஸ் தலைவராகிறார்!

post image

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் கடந்த மாத இறுதியில் புனே அருகில் உள்ள பாராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து அவர் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் விதமாக சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்துள்ளனர். கட்சியின் தேசிய நிர்வாக குழுக்கூட்டம் மும்பையில் நடந்தது.

இக்கூட்டத்தில் சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அதோடு அஜித் பவாரின் மகன் பார்த் பவார் தற்போது சுனேத்ரா பவார் வகித்து வரும் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவார் பேசுகையில், ''இது ஒரு வலிமிக்க தருணம். எனக்கு வழங்கப்பட்டுள்ளது வெறும் பதவி மட்டுமல்ல. கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையையும் போராட்டத்தையும் இந்தப் பதவி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உங்களது நம்பிக்கைதான் எனது பலம்.

எனது கணவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் அவரின் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஆனாலும் அவரது சில கனவுகள் நிறைவேறாமல் இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து அதனை நிறைவேற்றுவோம்'' என உருக்கமாகத் தெரிவித்தார். அவர் தனது பேச்சில் சரத் பவாரை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் தனது தாயார் பற்றி சுனேத்ரா பவார் குறிப்பிட்டார்.

இதில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பாக வெளியாகும் கருத்துக்கள் குறித்து பேசினார். அவர் தனது உரையில், ``எங்களது கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்" என சரத் பவார் கட்சியை முறைமுகமாக சாடினார்.

கட்சியின் மற்றொரு தலைவரான சுனில் தட்கரே,'' 2004-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை விட அதிக இடங்களை தேசியவாத காங்கிரஸ் பெற்றது. அப்படி இருந்தும் அஜித் பவாருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் 13 கோடி மகாராஷ்டிர மக்கள் ஒரு சிறந்த முதலமைச்சரை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது''என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் அஜித் பவார்
அஜித் பவார்

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் ஒன்றாக இணைப்பது குறித்து அஜித் பவார் உயிரோடு இருந்தபோது சரத் பவார் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து அஜித் பவார் இறந்த பிறகு சரத்பவார் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அஜித் பவார் இறந்துவிட்ட நிலையில் இரு அணிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அஜித் பவார் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் இரு கட்சிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே அஜித் பவாரின் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மீது சரத் பவாரின் பேரன் ரோஹித்பவார் மும்பை போலீஸில் புகார் கொடுக்க சென்றார். ஆனால் போலீஸார் விமான நிறுவனம் மீது புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதற்கு மிகப்பெரிய தலைவர் ஒருவரின் குறுக்கீடு இருப்பதாக ரோஹித் பவார் குற்றம் சாட்டி இருக்கிறார். ரோஹித் பவார் புனேயில் உள்ள சி.ஐ.டி போலீஸில் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பொறியாளருக்கு 7 லட்சம்; மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சம்! - தெலங்கானா அரசு அறிவிப்பு

தெலங்கானா அரசு சமீபத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. தெலங்கானாவின் மின் துறையில் மூத்த பொறியாளராக இருக்கும் நபருக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளமாக வழங்கப்பட... மேலும் பார்க்க

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப ... மேலும் பார்க்க

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம... மேலும் பார்க்க

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க