செய்திகள் :

Russian Oil: 'எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்' - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா

post image

"ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி"

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை.

ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, 'எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை' என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா.

டிமிட்ரி பெஸ்கோவ்
டிமிட்ரி பெஸ்கோவ்

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது,

"இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது,

"ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது.

இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில், 'என்ன நிலைப்பாடு?' என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.

"கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம்" - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் மு... மேலும் பார்க்க

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால், அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவ... மேலும் பார்க்க