செய்திகள் :

TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' - அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலரும் 'நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே...' என அவையிலேயே குமுறி வருகின்றனர். காரணம் என்ன?

Senthil Balaji
Senthil Balaji

மானியக்கோரிக்கையில் ஒரு நாளைக்கு 2 துறைகள் தொடங்கி 6 துறைகள் வரைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவையில் விவாதிக்கப்படுகிறது. ஒரு துறை சம்பந்தமான விவாதத்துக்காக அவை கூடுவதற்கு முன்பே 'கொள்கை விளக்கப் புத்தகம்' அளிக்கப்பட வேண்டும். அந்தப் புத்தகத்தில் துறையின் தற்போதைய நிலவரம் மற்றும் திட்டங்கள் குறித்த தரவுகள் இருக்கும்.

அதை எம்.எல்.ஏக்கள் படித்துவிட்டு வந்து அவையில் பேசும்போது விரிவாக தங்களின் கருத்துகளை பேசுவார்கள். ஆனால், இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொள்கை விளக்கப் புத்தகம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதால் அந்தப் புத்தகத்தை படித்து வர சிரமமாக இருக்கிறதென எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மின் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'இன்று 6 துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகம் நேற்றிரவு 10 மணிக்குதான் வழங்கப்பட்டது. 6 துறைகளுக்கும் சேர்த்து 834 பக்கங்கள் இருக்கிறது. அதை படித்து முடிக்க இரவு 3:30 மணி ஆகிவிட்டது. மூன்றரைக்கு தூங்கி ஐந்தரை மணிக்கு எழுந்தரித்து அவைக்கு வந்திருக்கிறேன். அதனால் சீக்கிரமே கொள்கை விளக்கப் புத்தகங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

EPS
EPS

அதேமாதிரி, இன்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இன்றைக்கு 6 துறைகளின் மீதான விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகங்கள் நேற்றிரவு 8 மணிக்குதான் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நாங்கள் எப்படி அந்த புத்தகங்களை படித்து வந்து சீராக விவாதிக்க முடியும்?' என்றார்.

இதேமாதிரியாக நிறைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொள்கை விளக்கப் புத்தகம் தாமதமாவதால் இரவு தூக்கத்தை தொலைக்கிறோம் என அவையிலேயே குமுறுகின்றனர்.

உறுப்பினர்களின் குறைகளை கேட்டுக் கொண்ட சபாநாயகர், '24 மணி நேரத்துக்கு முன்பாக கொள்கை விளக்கப் புத்தகத்தை வழங்கக்கோரி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துகிறேன்' என்றார்.

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்... மேலும் பார்க்க

"கட்சி வேறுபாடின்றி பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.!"- எம்.பி கனிமொழி

"அக்கா கனிமொழி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பெண் தோழர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பழைய சங்கிகளோடு சேர்த்து இப்போது தவெக ஆதரவாளர்களும் இணைந்து அச... மேலும் பார்க்க

"தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்.!"- தங்கம் தென்னரசு சொல்வதென்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய், அமைச்சர்கள் குறித்து ஒருமையில் பேச்சு - திமுக MLA துரை.சந்திரசேகரன் சர்ச்சை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்விழாவில் மேடைய... மேலும் பார்க்க

"ஒரே திரைப்படத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஓட்டுகிறது.!" - ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூ... மேலும் பார்க்க

'சொந்த ஊரிலேயே அகதி போல இருந்தோம்; சொன்னதை செஞ்சுட்டாரு முதல்வர்.!'- நெகிழும் பரந்தூர் போராட்டகுழு

'பரந்தூர் விமான நிலையத் திட்டம்' ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்குழுவிடம் பேசினோம... மேலும் பார்க்க