செய்திகள் :

மகாராஷ்டிரா: வென்டிலேட்டர் வெடித்து மருத்துவமனையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் வெண்டிலேட்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்துக்கொண்டது. மருத்துவமனையின் 3 வது மாடியில் உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் 39 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனர். அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்ட வார்டுக்கு விரைந்து வந்து குழந்தைகளை வெளியேற்றத் தொடங்கினர்.

மருத்துவ உபகரணங்கள் துண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர்.

குழந்தைகள் அனைவரும் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் 3 குழந்தையில் தீ மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னையால் உயிரிழந்தனர். மேலும் தீவிபத்தில் படுகாயம் அடைந்த 6 குழந்தைகள் அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

போலீஸ் துணை கமிஷனர் உட்பட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. மூன்று பிரிவிலும் இத்தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களை டாக்டர்கள் சமாதானப்படுத்தினர்.

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க

தஞ்சை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர்; காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் பலியான சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில்... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரத்தில் சிக்கிய புடவை; பெண் தொழிலாளி உயிரிழப்பு - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் ச... மேலும் பார்க்க

மும்பை நிலச்சரிவு: பாறை உருண்டு வீடுகளில் விழுந்ததால் 5 பேர் பலி; நள்ளிரவில் என்ன நடந்தது?

மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் கெளஷியா சால் பகுதியில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீட்டில் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உற... மேலும் பார்க்க

விமானத்திற்குள் கஞ்சா புகைத்த பைலட்; கீழ்நோக்கி பறந்த விமானத்திற்குள் மிதந்த பயணிகள்; நடந்தது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி: `இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' - HM சஸ்பெண்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரித... மேலும் பார்க்க