செய்திகள் :

Trump : குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரம்ப்... எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல முடியாது?!

post image

சில நாடுகளின் சட்டப்படி, குற்றவியல் தண்டனைப் பெற்றவர்கள் அந்த நாடுகளுக்குள் வர முடியாது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் 'ஹஸ் மனி (Hush Money)' வழக்கில் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அதிபராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.

ஹஷ் மனி வழக்கில் டிரம்பிற்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர் 'குற்றவாளி தான்' என்று மட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் சொல்லியுள்ளதுபோல், பாதுகாப்பு மற்றும் சில காரணங்களுக்காக, குற்றவியல் தண்டனை பெற்ற ஒருவர் நாட்டிற்குள் நுழைய முடியாது. அப்படி பார்த்தால், டிரம்ப் குற்றவியல் தண்டனை பெற்றவர் ஆவார். இதனால், இவர் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கலை சந்திக்கலாம்.

Trump: எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியாது?!

இந்தியா, கனடா, லண்டன், ஜப்பான், இஸ்ரேல், சீனா, பிரேசில், கம்போடியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கியூபா, ஈரான், கென்யா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றவியல் குற்றவாளியை அனுமதிக்காது.

டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவர் இந்த நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், என்ன நடைமுறை கொண்டுவரப்படும் அல்லது இந்த நாடுகள் அவரை உள்ளேயே அனுமதிக்காதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

``பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினரை கைதுசெய்வதா..?" - சீமான் கண்டனம்

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது, விழுப்புரம் பகுதியில் பாதிக்கப... மேலும் பார்க்க

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 15 மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் ... மேலும் பார்க்க

`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம்... மேலும் பார்க்க

Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா

இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcas... மேலும் பார்க்க

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த ... மேலும் பார்க்க