செய்திகள் :

TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர

post image

நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.

இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாகத் தகவல்கள் கசிந்தன.

எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார்.

விஜய் வருகை
விஜய் வருகை

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் காலையிலேயே ஆஜராகவிட்டிருந்தனர். செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார்.

வழக்கமாக, நிர்வாகிகள் கூட்டத்துக்கும் இணைப்பு விழாக்களுக்கும் அனைவரும் வந்த பிறகு கடைசியாகத்தான் விஜய் அலுவலகத்துக்கு வருவார். ஆனால், செங்கோட்டையன் சூப்பர் சீனியர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக விஜய் செங்கோட்டையனுக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.

காலை 9:15 மணிக்கு வந்த விஜய் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அலுவலகத்திலுள்ள அவரது அறையில் காத்திருந்தார். விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு சற்று அருகே இருக்கும் ஆதவ்வுக்கு சொந்தமான இல்லத்தில்தான் செங்கோட்டையன் தங்கியிருந்தார். ஆதவ் தரப்புதான் செங்கோட்டையனை தவெகவுக்குள் இணைக்கும் அசைமென்ட்டை கையிலெடுத்து முடித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தவெக இணைந்த செங்கோட்டையன்
விஜய்யின் தவெக இணைந்த செங்கோட்டையன்

ஆதவ் கார் முன்பக்கம் வர பின்னால் வந்த காரில் செங்கோட்டையன் வந்தார். ஆதவ் செங்கோட்டையனை வரவேற்று அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லவே, உள்ளே விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார்.

செங்கோட்டையனுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பொறுப்பைக் கொடுத்திருப்பதாகவும் தகவல்.

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க