செய்திகள் :

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

post image

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய்.

இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், "நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ.

யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும்.

அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’. 

எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா?

தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்
தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம்

இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க.

இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள். 

சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது" என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக... மேலும் பார்க்க

கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் - டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி

கோவை காந்திபுரம் பகுதியில்45ஏக்கர் பரப்பளவில் ரூ.212கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது.1,000பேர் அமரக்கூடிய அரங்கம்,நூற்றுக்கணக்கான தாவர வகைகள்,செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று... மேலும் பார்க்க

TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்களை சந்தித்திருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியின் உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அரைமணி நேரம் மக்கள் முன்பு பேசி... மேலும் பார்க்க

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய க... மேலும் பார்க்க

"நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல்" - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்... மேலும் பார்க்க