செய்திகள் :

புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!

post image

தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத்தை தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து அதனை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். புனே சதாசிவ் பேட் பகுதியில், அஞ்சு மானே என்ற பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வாங்கிக்கொண்டு வந்தபோது சாலையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

உடனே அதில் எதாவது மருந்து இருக்கலாம் என்று கருதி அதனை எடுத்து தனது வண்டியில் தனியாக வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மருந்தும், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது.

உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது பணம் இருந்த பையை தவறவிட்டார்களா என்று அஞ்சு விசாரித்தார். அப்போது ஒருவர் மிகவும் பதட்டத்துடன எதையோ தேடிக்கொண்டு வந்தார். அவரது பதட்டத்தை பார்த்த அஞ்சு அவரிடம் என்னவென்று விசாரித்தார். உடனே அவர் தான் பேக்கை தவறவிட்டுவிட்டதையும், அதில் பணம் மற்றும் மருந்து இருந்ததை தெரிவித்தார்.

உடனே பணத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் என்பதை அறிந்து கொண்ட அஞ்சு அந்த பேக்கில் என்னவெல்லாம் இருந்தது என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு அதனை அவரிடம் ஒப்படைத்தார். அவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பேக்கில் ரூ.10 லட்சம் இருந்தது. பணத்திற்கு சொந்தக்காரர் மிகவும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். அப்பெண்ணின் இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி உள்ளூர் மக்கள் சிறிய பாராட்டு விழா எடுத்தனர். அதில் அவருக்கு ஒரு சேலையும், சிறிது ஊக்கத்தொகையும் கொடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அஞ்சு புனே மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரித்து வருகிறார்.

கேரளா: திருமண நாளில் மணமகளுக்கு விபத்து; மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய இளைஞர்!

கேரள மாநிலம் ஆலப்புழா தும்போளியைச் சேர்ந்த மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன். சேர்த்தலா கே.வி.எம் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார், ஷாரோன். இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர... மேலும் பார்க்க

McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்... மேலும் பார்க்க

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.... மேலும் பார்க்க

ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் நூடுல்ஸ், தேநீர் தயாரித்த பெண்; வீடியோ - எச்சரிக்கும் ரயில்வே

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூ... மேலும் பார்க்க

"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு... மேலும் பார்க்க