செய்திகள் :

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மந்தாகினி பேசியது,

" அகமதாபாத்தில் வளர்ந்த நாங்கள் 6 சகோதர சகோதரிகள். அதில் நான் தான் மூத்தவள். எங்களுடைய தந்தை சுதந்திர போராட்ட வீரராக இருந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்து பிறகு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டார். பணம் இல்லாததால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

எங்களை அம்மா தான் வளர்த்தார். கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. 16 வயதில் ஒரு பால் மந்திரியில் மாண்டேச்சரி ஆசிரியரானேன். எனக்கு பெரிதாக ஆங்கிலம் தெரியாது. ஆனால் சமூக நலத்திட்டங்களில் சேர்ந்தேன். பஞ்சாயத்து விவாதங்களில் அமர்வது, பெண்களுக்கு அவர்களின் உரிமையை கற்பிப்பது போன்ற பலவற்றில் செயல்படத் தொடங்கினேன்.

அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போது மொபெட் ஓட்டக் கற்றுக்கொண்டேன். பிறகு ஒரு ஜீப் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இறுதியாக, ஹேண்ட் ஸ்கூட்டரையும் வாங்கினேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒருமுறை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன. நான் அந்த ஓட்டத்துடனே சென்றேன். இன்றைக்கு எங்களைப் பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த சமூகம் எனக்காக கற்பனை செய்து பார்க்காத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன்” என பெருமைப்பொங்க சொல்கிறார் மந்தாகினி.

இந்நிகழ்வு குறித்து மந்தாகினி ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேயுடன் பேசிய போது,

" இந்த நகரத்துச் சாலைகளில் ஸ்கூட்டரில் பறப்பது எனக்கு அத்தனை பிரியம். 87 வயதில் ஏன் ஸ்கூட்டரை ஓட்டுகிறீர்கள் என்று மக்கள் கேட்கும்போது, "ஏன் கூடாது?" என்று கேட்பேன். இந்த உலகில் வாழ்வதற்காக சிரமப்படுவதும் உழைப்பதும் ஒருபுறம் இருந்தாலும், முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதும் வாழ்க்கையே" என புத்துணர்வு தருகிறார். சமூக வலைத்தளத்தில் இவர்களின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காலை 11 மணிக்கு பள்ளி வக... மேலும் பார்க்க

போலந்து: காட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

போலந்தில் உள்ள நிசின்ஸ்கா வனப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நாணயங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்... மேலும் பார்க்க

`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?

உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான்... மேலும் பார்க்க

Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்ன சொல்கிறார்?

நியூயார்க்கில் நடந்த ஒரு ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது.பிரபல இத்தாலிய கலைஞர் மௌ... மேலும் பார்க்க

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார... மேலும் பார்க்க