செய்திகள் :

`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம்

post image

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அக்கடிதத்தில் தனது வகுப்பு ஆசிரியை தண்டனை என்ற பெயரில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். வகுப்பில் இரண்டு விரல்களுக்கு இடையில் பேனாவை வைத்து இரண்டு விரல்களையும் நன்றாக அழுத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு கையை பிடித்துக்கொண்டு அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வகுப்பில் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, கையை பிடித்து, `எப்படி இந்த அளவுக்கு குளர்ச்சியாக இருக்கிறது?' என்று கேட்பார் என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தெரிவித்துள்ளார்.

மாணவி வீட்டில் சகஜமாகத்தான் இருந்தார் என்றும், அவரை பள்ளியில் யாரோ சித்ரவதை செய்திருக்கவேண்டும் என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

4 மாணவர்கள் தற்கொலை

கடந்த சில நாட்களில் ஆசிரியர்களின் சித்ரவதையால் 4 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆசிரியர்களின் சித்ரவதையால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து இருக்கிறது. டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 3 ஆசிரியர்களின் சித்ரவதையால் 10வது வகுப்பு படிக்கும் மாணவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதே போன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் 4வது வகுப்பு படிக்கும் மாணவியும் பள்ளி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதே போன்று ராஜஸ்தானில் உள்ள கரவுலி மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்களின் சித்ரவதையால் 9வது வகுப்பு படிக்கும் மாணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கடிதமும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணமான ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை தடுப்பு மையம்

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனின் இடது கண் பாதிக்கப்பட்டு செயல் இழந்துள்ளது.மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் ம... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் MLA கொலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளி!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்கள் 3 பேரை குற்றவாளி எனச் சென்னை நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) தீர்ப்பளித்திருக்கிறது.முன்னதாக, 2005 ஜனவரி 9-ம் தேதி கு... மேலும் பார்க்க

"அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்"-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பண... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க