செய்திகள் :

"அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்"-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?

post image

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு துரைசாமி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுப்புலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி வழங்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளார். வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அறையில் உறங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மாடியில் இருந்த அறையில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை

காலையில் சுப்புலட்சுமி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதும், நகைகள் மாயம் ஆகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருக்கக்கூடிய கை ரேகைகளை ஆய்வு செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு இதேபோல், துரைசாமி வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது அதே வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை

இது குறித்து போலீஸார் கூறுகையில், "கடந்த 2023-இல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரிக்கப்பட்டது. அதைவைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரத்தைச் சேர்ந்த அணில்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 பவுன் நகைகளும் மீட்கப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்" என்றனர்.

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார். அவர் அங்... மேலும் பார்க்க

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க