செய்திகள் :

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

post image

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு போக்சோ விசாரணைக் கைதிகளுக்கான பிளாக்கில் இருந்து திருமலைக்குமார் மீது கடந்த 12-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

பாளையங்கோட்டை மத்திய சிறை

இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சிறை வளாகத்தில் உள்ள குளியலறையில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட சக கைதிகள் உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெருமாள்புரம் காவல்நிலைய போலீஸார் திருமலைக்குமாரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போன்று கடந்த அக்டோபர் 14-ம் தேதி, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் இரண்டு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை மத்திய சிறை

தீபாவளி பண்டிகையின்போது ஜாமீன் கிடைக்காததால் அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், வினோத்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை பெற்றுச் சென்றனர். தற்போது இரண்டாவது தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க

மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே? ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகைராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வ... மேலும் பார்க்க