செய்திகள் :

ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

post image
கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகை
கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகை

ராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் முனியராஜ்(21). இவர் ஷாலினியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஷாலினியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

கொலையாளி முனியராஜ்
கொலையாளி முனியராஜ்

இதுகுறித்து ஷாலினி தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஷாலினியின் தந்தை நேற்று முனியராஜை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாலினி இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். சேரான்கோட்டை வீதியில் ஷாலினியை வழிமறித்த முனியராஜ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தினால் ஷாலினியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் உடன் வந்த இரு மாணவிகளும் இச்சம்பவத்தைக் கண்டு மயங்கி விழுந்தனர் மாணவிகளின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாணவிகள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

சமாதானம் செய்த போலீஸார்

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முனியராஜ் அங்கிருந்து தப்பி தலைமறைவானார் தகவல் அறிந்து வந்த மாணவியின் உறவினர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மற்றும் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா, நகர்மன்ற தலைவர் நாசர்கான் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

அவர்களது சமாதானத்தை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் கொலையாளி முனியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே? ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்... மேலும் பார்க்க

`40 வழக்குகளில் தொடர்பு; தேடப்படும் முகமுடி கொள்ளையர்கள்’ - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நால்வழிச்சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரினை நிறுத்தி சோதன... மேலும் பார்க்க

குமரி: அரசு நிலத்தை பங்குபோட்டு கொடுத்தாரா அதிமுக பிரமுகர்? - தாசில்தார் புகாரால் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட சிறமடம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. அங்கு மின்சார சுடுகாடு அமைக்க அரசு சில மாதங்களுக்கு முன்பு முயன்றது. அதற்கு அப்பக... மேலும் பார்க்க

US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக ந... மேலும் பார்க்க

விருதுநகர்: போனுக்கு வந்த லிங்க்; ஒரே க்ளிக்கில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மொபைலுக்கு கடந்த 1ம் தேதி பி.எம் கிசான் லிங்க் வந்துள்ளது. அவர் தனக்கு வந்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி; தாயின் கண்ணெதிரே நடந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. பெண் பிள... மேலும் பார்க்க