செய்திகள் :

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

post image

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர்.

ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார்.

Actress Tulasi
Actress Tulasi

தமிழில் இவர் நடித்த பல அம்மா கேரக்டர்கள் பெரிதளவில் கவனம் பெற்றிருக்கின்றன.

தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார் நடிகை துளசி. ஓய்வு பெற்றப் பிறகு தன்னுடைய வாழ்க்கையை சாய் பாபாவிற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் சாய் பாபாவின் பாதங்களை புகைப்படமெடுத்து பதிவிட்ட அவர், "என்னையும் என் மகனையும் காத்து வழிகாட்டுங்கள் சாய் நாதா" எனக் குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார்.

Actress Tulasi
Actress Tulasi

இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், "இந்த டிசம்பர் 31-ல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன்.

இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன். வாழ்க்கையைக் கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி சாய்ராம்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நடிகை துளசியின் இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கிறது. ஆனால், ரிடையர்மெண்ட் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த பதிவை இப்போது அவர் நீக்கி இருக்கிறார்.

Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்... மேலும் பார்க்க

மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.தேவா இப்படத்திற்கு இசையமைத்தி... மேலும் பார்க்க

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க

"என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு" - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ர... மேலும் பார்க்க

Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" - பர்சனல் பகிரும் ரோஜா!

90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இய... மேலும் பார்க்க

Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், '... மேலும் பார்க்க