செய்திகள் :

மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்

post image

பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளார் மகன். அப்போது தந்தை வங்கியில் தனிநபர் கடன் வாங்கியிருப்பதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முதலில் ரூ. 18.5 லட்சம் ஆக இருந்த அந்தக் கடனில், தற்போது ரூ. 10.6 லட்சம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ. 36,000 EMI செலுத்த வேண்டும் என்றும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகை அவரது மாத சம்பளத்தில் 90% என்பதால், அவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்துவது என்று தவித்துள்ளார்.

கடன் - loan

இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது, இது காப்பீடு செய்யப்படாத கடன் என்றும், சட்டப்பூர்வ வாரிசுதான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அந்த நபர், 'ரெட்டிட்' சமூக வலைதளத்தில் உதவி கோரியுள்ளார்.

அவரது பதிவைப் பார்த்த சிலர் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர். "தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன் (Unsecured Loan). நீங்கள் கடனுக்கு இணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளித்தவராகவோ இல்லாத பட்சத்தில், சட்டப்பூர்வ வாரிசான நீங்கள் அதைக் கட்ட வேண்டிய அவசியமில்லை" என்று ஒரு பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொருவர் கூறுகையில் "முதலில் ஒரு வழக்கறிஞரை அணுகுங்கள். கடன் ஒப்பந்தத்தைப் படித்து, வாரிசுதான் கடனைச் செலுத்த வேண்டும் என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கேளுங்கள். வங்கி உங்களை ஏமாற்றி புதிய ஆவணங்களில் கையெழுத்து வாங்க முயற்சி செய்யலாம், கவனமாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்த நபர் வங்கிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடன் ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டு விவரங்களைக் கோரியுள்ளார்.

``30 வயதில் கைவிட்ட காதலன் என்ன செய்வேன்?'' - புலம்பிய பெண்; ஆலோசனை சொன்ன நெட்டிசன்கள்

சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்த பிறகு காதலர்களிடையே பிரேக்கப் ஆவது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பேசி முடிக்கும் போது எதாவது வாய்த்தகராறு ஏற்பட்டாலே பிரேக்கப் ச... மேலும் பார்க்க

kathipara Flyover Metro Bridge : வியக்கவைக்கும் கத்திபாரா மெட்ரோ பாலம் பணிகள்!

kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyo... மேலும் பார்க்க

டெல்லி குண்டுவெடிப்பு: அமலாக்கத் துறை சோதனையில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லியில் கடந்த வாரம் நடந்த கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் மற்றும் அதற்கு திட்டமிட்ட டாக்டர் முஜாமில் சகீல் உட்பட இக்குண்டு வெடிப்பு ... மேலும் பார்க்க

`இறந்துவிட்டார்' என நினைத்த நபரை 28 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு இழுத்து வந்த SIR! - என்ன நடந்தது?

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக SIR படிவம் கொடுக்கப்பட்டு, வாக்காளர்களிடம் நிரப்பி வாங்கப்படுகிறது. இதனால் வெளியூரில் இருப்பவர்கள... மேலும் பார்க்க

5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!

சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவ... மேலும் பார்க்க

சேலம் : 50 ஹெக்டேர்; வாக்கிங், சைக்கிளிங், குடில்கள்.! ரூ.10 மட்டுமே - `நகர்வன’த்தில் என்ன ஸ்பெஷல்?

சேலம் மாவட்டம், `குரும்மபட்டி வன உயிரியல் பூங்கா' அருகில் புதியதொரு சுற்றுலா தலம் அண்மையில் சேலம் வனசரகரால் திறந்து வைக்கப்பட்டது என்ற தகவலோடு அங்கு பார்வையாளராக சென்றோம்.என்ன இருக்கு அங்கு? சுமார் 50... மேலும் பார்க்க