செய்திகள் :

மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

post image

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.

தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

 ‘மாண்புமிகு பறை’
‘மாண்புமிகு பறை’

இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, " என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க.

அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம்.

அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு.

அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு.

ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா
ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா

நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள்.

என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும்.

இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும்" என பேசியிருக்கிறார்.

Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்... மேலும் பார்க்க

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி... மேலும் பார்க்க

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க

"என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு" - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ர... மேலும் பார்க்க

Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" - பர்சனல் பகிரும் ரோஜா!

90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இய... மேலும் பார்க்க

Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், '... மேலும் பார்க்க