செய்திகள் :

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

post image

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசையும் சென்னை மாநகராட்சி ஆணையரையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

ஜெயக்குமார் பேசியதாவது, ``2002 இல் பாஜக ஆட்சியில் திமுக அவர்களோடு கூட்டணியில் இருந்தது. அப்போதும் தீவிர திருத்தத்தை நடத்தியிருந்தார்கள். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குள்ளவர்கள் என 49 லட்சம் பேரை பட்டியலிலிருந்து நீக்கினார்கள்.

அப்போதெல்லாம் ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தார். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தீவிர திருத்தத்தை செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதை செய்ய தவறிவிட்டது. அதிமுக சார்பில் நாங்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து ஓய்ந்துவிட்டோம். இறந்தவர்கள், விலாசம் மாறியவர்களின் பட்டியலை திமுக வைத்திருக்கிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு இறந்தவர்கள்தான் கைகொடுக்கின்றனர். திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் மேதமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களுக்கு SIR என்றால் கசக்கிறது. ஒரு பக்கம் SIR யை எதிர்ப்பது போல எதிர்த்துக் கொண்டு, இன்னொரு பக்கம் B.L.O க்களுடன் கட்சி ஆட்களை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின்.

திருத்தத்தை எதிர்க்கும் நீங்கள் அதை புறக்கணிக்க வேண்டியதுதானே. சென்னை மாநகராட்சி ஆணையர் திமுக மாவட்டச் செயலாளரை போல செயல்படுகிறார். அலைபேசியில் தொடர்புகொண்டால் கூட எடுப்பதில்லை. எழுத படிக்கத் தெரியாதவர்களை B.L.O க்களாக நியமித்து தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து வருகிறார். அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும். இல்லையேல் இன்னும் 4 அமாவாசைதான். ஆட்சி மாறியவுடன் உங்களுக்கான தண்டணை கிடைக்கும்.' என்றார்.

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ!டெல்லி வழியாக சிபாரிசு...2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பே... மேலும் பார்க்க

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

கோவை: "விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - அரச நீதி தவறியதற்கு தண்டனையா அல்லது பழி தீர்க்கும் அரசியலா?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்கட்... மேலும் பார்க்க

அன்று அதிமுக வட்டச் செயலாளர்; இன்று இங்கிலாந்தில் மேயர் வேட்பாளர் - தாமோதரன் சீனிவாசன் சாதித்த கதை!

சென்னையில் அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்த ஒருவர் இங்கிலாந்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் 'தொழிலாளர் கட்சி'யில் வளர்ந்து வரும் முக்கியமான ஒரு தலைவராக இருப்பதுடன் லண்டனில் உள்ள க்ரேடன் நகராட்சிய... மேலும் பார்க்க