செய்திகள் :

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு 2 வழக்குகள் பதிவுசெய்து, உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமாருக்கும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை ஆஜராகும்படி சிறப்பு புலானாய்வு குழு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் சாக்குப்போக்குச் சொல்லி விசாரணைக்கு ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். பத்மகுமாரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்குழுவினர் இன்று மாலை பத்மகுமாரை கைது செய்தனர்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

2019-ம் ஆண்டு வாசு தேவசம்போர்டு கமிஷனராக இருந்த சமயத்தில் பத்மகுமார் தேவசம்போர்டு தலைவராக இருந்தார். அந்த சமயத்தில்தான் தங்கம் மோசடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநடை கட்டளையில் தங்கம் பதிக்கப்பட்டிருந்த நிலையில், செம்பு கட்டளை என அன்றைய கமிஷனர் வாசு பதிவுசெய்திருந்தார். அது அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாருக்கும் தெரிந்தேதான் நடந்தது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்துள்ள உன்னி பத்மகுமாருக்கும் பிசினஸ் தொடர்பான பந்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கைதுசெய்யப்பட்ட பத்மகுமார்

கேரளாவை ஆளும் சி.பி.எம். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார் பத்மகுமார். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை விவகாரத்தை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய விவகாரமாக கையில் எடுத்துள்ளது. இந்த  நிலையில் பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. பத்மகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார். அவர் அங்... மேலும் பார்க்க

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க