செய்திகள் :

Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்சிக்கும் ஆசிரியர்!

post image

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது.

காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக ஏழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

அங்கே ஏ.கே ரக துப்பாக்கிகள், வெவ்வேறு வகை வெடிமருந்துகள், பிஸ்டல் ரவுண்ட்கள் மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதா பாசின்
அனுராதா பாசின்

பத்திரிகையின் அலுவலகத்திலும் கனிணிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். விசாரணையின் அடுத்தகட்டமாக செய்தித்தாளுடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த நடவடிகைக் குறித்து காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சிங் சவுத்ரி, "அவர்கள் எதாவது தவறு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுமனே அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே நடந்திருந்தால், இது மிகவும் தவறான ஒன்று" எனப் பேசியுள்ளார்.

SIA, J&K Police
SIA

Kashmir Times

1954ம் ஆண்டு வேத் பாசின் என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்ட இந்த செய்தித்தாள் பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட வேத் பாசின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால் மற்றும் பிரபோத் ஜாம்வால் பத்திரிகையை நடத்தி வருகின்றனர்.

பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல்

அனுராதா மற்றும் பிரபோத் ஆகியோர் நடைபெற்ற இந்தச் சோதனை, "சுயாதீன பத்திரிகையை மௌனமாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி" எனக் கருதுகின்றனர். மேலும், "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஒரு வலுவான, கேள்வி கேட்கும் பத்திரிகை அவசியம். எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்." எனக் கூறியுள்ளனர்.

அத்துடன் பத்திரிகை நடத்துவது குற்றமல்ல என்றும் என்ன சோதனை நடந்தாலும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கான அர்ப்பணிப்பு தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு

மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.பி.மூர்த்தி, கோ.தளபதி... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை" - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம்... மேலும் பார்க்க

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து... மேலும் பார்க்க

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எ... மேலும் பார்க்க

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னா... மேலும் பார்க்க