செய்திகள் :

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

post image

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து விண்ணப்பித்துள்ளனர். பிரதமர் மோடி நமக்கு எதிராக உள்ளார் என்ற பரப்புரை செய்வதே இவர்கள் நோக்கமாகும்.

வானதி சீனிவாசன்

மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு சில வரையறைகள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவான விளக்கங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிடவில்லை.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பட்டுள்ளதாக பொய் பரப்புரை செய்கிறார்கள். திமுக அரைகுறை செய்தியை மக்களிடம் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்த அறிக்கையை அரைகுறையாக எடுத்துள்ளார்கள். சுற்றுலா மற்றும் தலைநகர் என்ற அடிப்படையில் சில மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 மெட்ரோ
மெட்ரோ

மெட்ரோ வேண்டும் என்பதற்காக அடிப்படை ஆய்வுகள் செய்யவில்லை. திமுக போராட்டம் செய்து நாடகமாடுகிறது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று,  எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம்.

அறிக்கையில் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் வெளியிட்டும் ஐயய்யோ என்று பேசுகிறார்கள். கோவையில் முக்கிய வணிக கட்டிடங்களை இடிக்கும் நோக்கில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஒழுங்காக ஹோம் வொர்க் செய்யாமல் சமர்ப்பித்தது தான் பிரச்னை. கோவையில் திமுகவுக்கு 10 தொகுதிகளிலும் தோல்வியை தந்த மக்களை பழி வாங்கும் நோக்கில் திட்டம் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி

ஜெயிலில் இருந்தவரை அமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை. 40 எம்பிக்களை வைத்து ஏன் திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. நாங்கள் கோவைக்கு உறுதியாக மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.” என்றார்.

``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை" - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம்... மேலும் பார்க்க

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி... மேலும் பார்க்க

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எ... மேலும் பார்க்க

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னா... மேலும் பார்க்க

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ!டெல்லி வழியாக சிபாரிசு...2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பே... மேலும் பார்க்க

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க