AUS v ENG: Ashes-ல் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அதிசயம்; முதல் நாளில் மாஸ் காட்டிய ...
சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்
சிவகாசியில் ரீல்ஸ் மோகத்தில் சாலையில் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போன்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை பார்த்துக்கொண்டிருந்த டூவீலரில் சென்ற நபர் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இரண்டு இளைஞர்கள் பிரதான சாலையில் நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் ரீல்ஸ் எடுத்து சாலையில் செல்வோரின் கவனத்தை திருப்பியுள்ளனர் முயற்சித்துள்ளனர்.
அப்போது தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து நின்றதை கவனிக்காமல் அதன் பின்பக்கமாக மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவர் விபத்தில் சிக்கியதை பார்த்து சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்த இளைஞர்கள், அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ரீல்ஸ் மோகத்தில் வேண்டுமென்றே இது போன்ற விபரீதமான வீடியோக்களை எடுத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துவதுடன், பொது மக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



















