செய்திகள் :

மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!

post image

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து

மதுரை ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்த வெங்கடசுப்பு-பத்மாவதி தம்பதியினர் இன்று அதிகாலை அலங்காநல்லூர் செல்ல இரு சக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். செல்லும் வழியில் சிக்கந்தர் சாவடி அருகே காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்த நாய் மீது இரு சக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் மோதியதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே மனைவியின் கண் முன்பே உடல் நசுங்கி உயிரிழந்தார், பத்மாவதிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நாயும் உயிரிழந்தது.

விபத்து

இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்துவும், அவற்றையும், மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்ம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மதுரையில் நாளுக்கு நாள் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ... மேலும் பார்க்க

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க