செய்திகள் :

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?

post image

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட்

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர்.

பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதில், நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.

1981-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் பூர்வாரதி பகுதியில் பிறந்த மத்வி ஹித்மாவுக்கு 43 வயது.

கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்து வந்திருக்கிறார் மத்வி ஹித்மா.

மிக இளம் வயதிலேயே, அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து ஒரு தளபதியாகி இருக்கிறார்.

மத்வி ஹித்மா
மத்வி ஹித்மா

2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தான்.

இந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு சுக்மாவில் CRPF மீது 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொடிய தாக்குதலில் `மத்வி ஹித்மா' முக்கிய பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.தங்களின் முதல் தேர்தலாக 20... மேலும் பார்க்க

Assam: `அஸ்ஸாமுக்கு SIR கிடையாது; NRC நடவடிக்கைதான் காரணம்' - தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (Special Intensive Revision- SIR) தொடங்கியிருக்கிறது. SIR பணிகள் மூலம் பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அதிமுக திண்டுக்கல் ச... மேலும் பார்க்க

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க