செய்திகள் :

`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்

post image

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.

தங்களின் முதல் தேர்தலாக 2019 மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 தொகுதிகளிலும் (புதுச்சேரி உட்பட) வேட்பாளர்களை நிறுத்தினார்.

அப்போது கமல் தனது தேர்தல் பிரசார வீடியோ ஒன்றில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் டிவி மீது ரிமோட்டை தூக்கியெறிந்திருப்பார்.

அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39-ல் 38 இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதன்பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியை எதிர்த்து தனி கூட்டணியமைத்துக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், போட்டியிட்ட 140 இடங்களிலும் தோல்வி.

அதுவரையில் அ.தி.மு.க, தி.மு.க எதிர்ப்பில் தீவிரமாக இருந்த கமல் 2023-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ஆதரவளித்தார்.

அதைத்தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தத்துடன் தேர்தலில் போட்டியிடாமல் அக்கூட்டணிக்கு ஆதரவளித்தார்.

பின்னர், தி.மு.க-வுடனான ஒப்பந்தத்தின்படி கடந்த ஜூலையில் ராஜ்ய சபா எம்.பி ஆனார். இந்த நிலையில், 2019-ல் தி.மு.க-வை எதிர்க்கும் வகையில் டிவி மீது ரிமோட் தூக்கியெறிந்தது பற்றி கமல் பேசியிருக்கிறார்.

எம்.பி கமல் ஹாசன்
எம்.பி கமல் ஹாசன்

தஞ்சாவூரில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் மறைந்த தந்தை படத் திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு தேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களே-னு கேட்டீங்கனா...

ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனா ரிமோட்ட வேற ஆள் தூக்கிட்டு ஓடிட்டான்.

ரிமோட் அங்க போகக் கூடாது, அது மாநிலத்தோடதான் இருக்கணும். கல்வியே அப்படித்தான் இருக்கணும்னு நெனைக்றோம், ரிமோட்ட கொடுப்போமா...

எடுத்துட்டு வா திருப்பி, ஒளிச்சாவது வைப்போம், ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து தூக்கிட்டு போயிட்றான்... அப்டினு எடுத்த முடிவு இது.

இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்தத் தொல்லைகள் இருந்தே தீரும். அதை வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம்" என்று கூறினார்.

Assam: `அஸ்ஸாமுக்கு SIR கிடையாது; NRC நடவடிக்கைதான் காரணம்' - தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (Special Intensive Revision- SIR) தொடங்கியிருக்கிறது. SIR பணிகள் மூலம் பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி ச... மேலும் பார்க்க

’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அதிமுக திண்டுக்கல் ச... மேலும் பார்க்க

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க