தொல்காப்பியம் முற்றோதல்: `1602 நூற்பாக்களை மனப்பாடமாக ஓதி' 10-ம் வகுப்பு அரசு பள...
சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்றும், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருப்பதாகவும், விபத்து தொடர்பான தகவல்களை ஒருங்கிணைக்க அறிவுறுத்தியதாகவும் தெலங்கானா அரசு தெரிவித்திருக்கிறது.
மாநில அரசு உறுதிப்படுத்தியது. மேலும், இது தொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, ``விபத்து தொடர்பான விரிவான விவரங்களை சேகரிக்கவும், தெலங்கானாவைச் சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.
மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சவுதி தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் உடனடி நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கவும் தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரேவந்த் ரெட்டியின் உத்தரவைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ், டெல்லியில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலாளர் கவுரவ் உப்பலைத் தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கையை விரைவாகக் கண்டறிந்து உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஒருங்கிணைப்பு முயற்சிகளை எளிதாக்க, செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
















