செய்திகள் :

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

post image

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தே.மு.தி.கவினர் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

அப்போது உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், ``2005-ல் நடந்த தே.மு.தி.க மாநாடு, இதுவரை வரலாற்றில் அப்படி ஒரு மாநாடு நடந்ததே இல்லை.

சுமார் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட நம் மக்கள் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அங்கு ஒரு சிறு அசம்பாவிதம் நடந்ததா?

பிரேமலதா - விஜய்
பிரேமலதா - விஜய்

ஆனால் இப்போது யார் யாரோ மாநாடு நடத்துகிறார்கள். அதில் கலந்துகொள்ளும் மக்களும் நசுங்கி உயிரிழக்கிறார்கள். இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் தனி ஆளாக சிங்கம் போல அத்தனைக் கூட்டத்தையும் கட்டுப்படுத்துவார். சிவாஜி கணேசன் இறந்தபோது வந்த கூட்டத்தை ஒற்றை துண்டை சுழற்றிக் கட்டுப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.

அவர் மீது இருந்த மரியாதை கலந்த பயம் எல்லோரிடத்திலும் இருந்தது. உண்மைக்கு மட்டுமே நிற்பார் என்ற மக்களின் நம்பிக்கை அது. அவர் மக்களுக்காக வாழ்ந்தவர்." என்றார்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க

மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்... மேலும் பார்க்க