செய்திகள் :

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

post image

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த பணிகளில் BLO எனப்படும் பூத் லெவல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய அறிவுறுத்துவது, உரிய விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான வேலைகளை முடுக்கி விடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் SIR பணிச்சுமை காரணமாக BLO அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக SIR பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் பள்ளி ஊழியர் அனீஷ் ஜார்ஜ்.

44 வயதுடைய இவர் SIR பணிகளால் ஏற்பட்ட அதீத பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

suicide
suicide

அனீஷ் ஜார்ஜின் தந்தை இதுகுறித்து மலையாள ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், “ கடந்த சில நாட்களாக என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தார்.

ஆனால் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. எங்களால் இந்த வேதனையை தாங்கி கொள்ள முடியவில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் இன்று SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா ... மேலும் பார்க்க