டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA
Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.
தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.



















