செய்திகள் :

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?

post image

தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 17

இலங்கை கடேலாரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதனால் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (நவ. 18) சென்னை மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாட்டங்களிலும் தேனியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 18

அதன்பிறகு மழைப் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 19-ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மழை வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதைக் காட்டுவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் ப... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை?அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்... மேலும் பார்க்க

Rain Updates: தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்

பெரும்பாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நவம்பர் மாதத்தின் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் மழை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரு மாத மழை குறித்த சின்ன... மேலும் பார்க்க

மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்

ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா. ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பு... மேலும் பார்க்க