செய்திகள் :

மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்

post image

ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா.

ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புயல் குறித்த முக்கிய விவரங்கள் இங்கே...

நேற்று 300 கி.மீ வேகத்தில் நகர்ந்த மெலிசா புயல், ஜமைக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு பெரும் மழை மற்றும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்
மெலிசா புயல் தாக்கம்

இந்தப் புயலினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இப்போதைக்கு இந்தப் புயலினால் ஜமைக்காவில் 3 பேர், ஹைட்டியில் 3 பேர் மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'மெலிசாவின் தாக்கத்தைத் தாங்கும் அளவிற்கான கட்டமைப்பு ஜமைகாவில் இல்லை' என்று அந்த நாட்டில் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸே நேற்று அறிவித்தார். இதையடுத்து, அந்த நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் மிக வேகமாக நடந்தது... நடந்து வருகிறது.

மெலிசா புயலுக்கு 5-ம் வகை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஐந்தாம் வகை புயல் எச்சரிக்கை என்றால், அந்தப் புயலினான் வீட்டின் மேற்கூரைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்... வீட்டின் சுவர்கள் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், மின்சார துண்டிப்புகள் நாள் கணக்கில் தொடங்கி மாதக் கணக்கு வரை நீடிக்கலாம்.

இந்த மெலிசா புயல் கடந்த 21-ம் தேதி, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைகளில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மெலிசா புயல் 1.5 மில்லியன் ஜமைக்கா மக்களைப் பாதிக்கலாம் என்று செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலினால் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் இந்தப் புயல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்தப் புயலை 'நூற்றாண்டின் புயல்' என்று எச்சரித்துள்ளது உலக வானிலை அமைப்பு.

சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?' போட்டோ எடுத்து விகடனுக்கு அனுப்புங்க

வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும... மேலும் பார்க்க

Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவா... மேலும் பார்க்க

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.இந்தப் புயல் த... மேலும் பார்க்க

Rain Alert: சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் - முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தற்போது மோன்தா புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய இந்திய வானிலை அறிக்கை படி,இன்று தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வர... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில... மேலும் பார்க்க