செய்திகள் :

Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live

post image

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது.

இது நேற்று (அக்டோபர் 27) காலை 11:30 மணியளவில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக நிலைகொண்டது.

`மோன்தா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக வலுப்பெற்று மாலை முதல் இரவுக்குள் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

மேலும், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் மற்றும் சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் எண்ணுரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், கனமழை எதிரொலியாக ஆந்திராவின் 3 நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.இந்தப் புயல் த... மேலும் பார்க்க

Rain Alert: சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் - முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தற்போது மோன்தா புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய இந்திய வானிலை அறிக்கை படி,இன்று தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வர... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வ... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்த... மேலும் பார்க்க