செய்திகள் :

``நான் விற்பனைக்கு இல்லை'' - ஆர்யன் கான் வெப்சீரியஸை புகழ்ந்தது ஏன்? சசி தரூர் விளக்கம்

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் தி பட்ஸ் ஆஃப் பாலிவுட் என்ற பெயரில் புதிய வெப் சீரிஸ் இயக்கினார். அந்த வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இதில் லக்ஷ்யா லால்வானி, பாபி தியோல் மற்றும் சாஹர் பம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

இந்த வெப் சீரிஸை சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பார்த்துவிட்டு ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “எனக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. எனவே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் இருந்தேன். எனது சகோதரி ஸ்மிதா தரூர் என்னிடம் வெப் சீரிஸ் பார்க்கும்படி கூறினார்.

நான் கம்ப்யூட்டரில் ஆர்யன் கான் இயக்கிய வெப் சீரிஸை பார்த்து முடித்தேன். அந்த வெப் சீரிஸை புகழ வார்த்தைகள் கிடைக்காமல் திணறினேன். அதை இயக்கிய இயக்குனர் மிகவும் துணிச்சலானவர்.

இது போன்ற நையாண்டிகளுக்கு பாலிவுட்டில் துணிச்சல் தேவை. வெப் சீரிஸில் பெரும்பாலும் வேடிக்கையாகவும், சில நேரங்களில் மனதை உருக்குவதாகவும் இருக்கிறது. நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இது ஒரு தங்கம்" என்று நீண்ட ஒரு விமர்சனம் கொடுத்திருந்தார்.

ஷாருக் கானின் ட்விட்டர் பக்கத்தில் சசி தரூர், ஆர்யன் கானுக்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சசி தரூர்
சசி தரூர்

இந்த விமர்சனம் வெளியானவுடன் நெட்டிசன்கள் அதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சசி தரூர் பகுதி நேர வேலையாக பணம் வாங்கிக்கொண்டு இப்படி விளம்பர விமர்சனம் கொடுக்கிறார் என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சசி தரூர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “நான் விற்பனைக்கு இல்லை நண்பரே. நான் வெளிப்படுத்தும் எந்தக் கருத்துக்கும் இதுவரை யாராலும் பணமாகவோ அல்லது பொருளாகவோ செலுத்தப்பட்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன் கானின் வெப் சீரிஸில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமீர் கான், கரண் ஜோகர், ரன்பீர் கபூர் உட்பட பலரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர்.

"அது நமாஸ் அல்ல ஷஷாங்காசனம்"- யோகா கற்றுத் தந்த இஸ்லாமிய ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பு போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் பர்ஹன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் அருகில் இருக்கும் தியோஹரி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜபூர் தட்வி. இப்பள்ளி மாணவர்கள் தீபாவளி விடுமுற... மேலும் பார்க்க

விண்வெளியில் தீக்குச்சியைப் பற்ற வைத்தால் என்னவாகும்? - சீன வீரர்கள் நடத்திய திக் திக் சோதனை!

சீன விண்வெளி வீரர்கள், தங்கள் விண்வெளி நிலையத்தில் தீக்குச்சியைப் பற்ற வைத்து சோதனை நடத்திருக்கின்றனர். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.சீனாவின் ‘தியாங்கோ... மேலும் பார்க்க

உ.பி: மாணவியை சேர்க்க `கன்னித்தன்மை' சான்று கேட்ட மதரஸா நிர்வாகம்; பெற்றோர் போலீஸில் புகார்!

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் என்ற இடத்தில் மதரஸா சார்பாக பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வயது மாணவி படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு 7வது வகுப்பு சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 8வது வகு... மேலும் பார்க்க

பெங்களூரு Hit-and-Run வழக்கு: சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கன்னட நடிகை - என்ன நடந்தது?

சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிட்-அண்ட்-ரன் வழக்கில், விபத்தை ஏற்படுத்தியது பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான திவ்யா சுரேஷ் என்பது தெரியவந்... மேலும் பார்க்க

``மூக்குத்தி, காதணி, மாங்கல்யம் தவிர வேறு தங்க நகைகள் வேண்டாம்'' - கிராமத்தினர் அதிரடி முடிவு; ஏன்?

உத்தரகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பழங்குடிப் பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு புதிய கட்டுப்பாட்டை தங்களுக்குள் விதித்துள்ளனர். அதாவது திருமணங்கள், குடும்ப விழாக்களின்போது திருமணம்... மேலும் பார்க்க