செய்திகள் :

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

post image

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

அதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். அதே நேரம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கிடையில் தவெக தலைவர் கரூர் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து தவெக தலைவர் சந்தித்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனித்துக்கொள்வதாகவும் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது. அதே நேரம் தவெக தலைவர் விஜய் நேரில் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் மக்களை நேரில் வரவழைத்து விஜய் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழிசை, ``தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் சுதந்திரமாக ஒரு இடத்துக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாத சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயற்கையான விஷயம். ஆனால், நினைத்த நேரத்தில் அனுமதி பெறாமலோ, அல்லது அனுமதி பெற்றும்கூட ஒரு இடத்துக்குச் செல்ல முடியவில்லை. இதுதான் இப்போது தமிழ்நாட்டின் கள எதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் பிபிசி உலகசேவை ஆசிரியர், லண்டன்கட்டு... மேலும் பார்க்க

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய ... மேலும் பார்க்க