செய்திகள் :

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

post image

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய நிர்வாகக் குழு ஒன்றை விஜய் இப்போது அறிவித்திருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை செய்வோம் என தவெக தரப்பு கூறி வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் வரவைத்து விஜய் ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிலிருந்து மற்ற விவகாரங்கள் குறித்தும் தவெக தரப்பு பேச ஆரம்பித்திருக்கிறது. நெல் கொள்முதலை முன்வைத்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

புதிய நிர்வாகக் குழு

அதேமாதிரி, நேற்று மாலையில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு ஒன்றையும் விஜய் அறிவித்திருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் தன்னுடைய உத்தரவின்படி கவனிப்பதற்காக இந்த குழு என விஜய் கூறியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் என முக்கிய நிர்வாகிகளும் 15 க்கும் மேற்பட்ட மா.செக்களும் அந்த நிர்வாகக்குழுவில் இடம்பிடித்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

இந்தப் பட்டியலில் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கிறது. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகியாக அறியப்பட்ட பொருளாளர் வெங்கட்ராமன், துணைப் பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோரின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என வெங்கட்ராமன் அதிருப்தியில் இருந்ததாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். அதனால் மற்ற தலைமைக்கழக நிர்வாகிகளுடன் சேராமல் தனித்தே செயல்பட்டு வந்தார்.

கரூர் குடும்பங்களை விஜய் சந்தித்த போது கூட அந்த கூட்டத்திற்கு வந்த வெங்கட்ராமனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையாகியிருந்தது.

TVK Vijay
TVK Vijay

அதேமாதிரி, சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் மரிய வில்சனுக்கும் சென்னை மாவட்டத்தின் நிர்வாகக்குழு பொறுப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாகக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் அறிவித்திருக்கும் இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூர் அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியில் கட்டமைப்புரீதியாக சில மாற்றங்களை செய்ய விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் அது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி கோவை வருகை: போலீஸ் பாதுகாப்பை மீறி பைக்கில் வேகமாக சென்றது ஏன்? - இளைஞர் சொன்ன காரணம்

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகைகுடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்திருந்தார். காலை கொடிசியாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உ... மேலும் பார்க்க