செய்திகள் :

துணை ஜனாதிபதி கோவை வருகை: போலீஸ் பாதுகாப்பை மீறி பைக்கில் வேகமாக சென்றது ஏன்? - இளைஞர் சொன்ன காரணம்

post image

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்திருந்தார். காலை கொடிசியாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 1,800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

மாநகராட்சி அலுவலகம் உள்ள டவுன் ஹால் பகுதியிலும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சி.பி.ராதாகிருஷ்ணன் மதியம் 2.30 மணியளவில் அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அங்கு ஒருவழிப் பாதையில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு அதிவேகமாக வந்தனர்.

காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் அவர்கள் நிற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி

“காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.” என்று பாஜக-வினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். “இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க” வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

“எனக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. கோவை மக்கள் தான் என் பாதுகாப்பு” என்று சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

காவல்துறை விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “TN66 AQ 4740 என்கிற வண்டியில் பயணித்த இருவர் காவல்துறை எச்சரிக்கையை மீறி அதிவேகமாக சென்றுவிட்டனர். விசாரணையில் அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.

இளைஞர் பேசும் வீடியோ
இளைஞர் பேசும் வீடியோ

இளைஞர் சொன்ன காரணம்

மேலும் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர், “மதுபோதையில் இருந்ததால் காவல்துறையினர் அபராதம் போட்டுவிடுவார்கள் என்று வேகமாக சென்று பிறகு கீழே விழுந்துவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய ... மேலும் பார்க்க