செய்திகள் :

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

post image

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் SIR செயல்படுத்தவில்லை.

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

SIR நடவடிக்கை என்பது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ.க-வும், தேர்தல் கமிசனும் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.

அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?. அதிமுக SIR வருவதற்காக காத்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். பா.ஜ.க-வின் பிடியில் அழிவில் இருக்கும் அ.தி.மு.க, இந்த துரோகத்திற்கு துணை போகக்கூடாது. முதல்வர் அழைப்பு விடுத்துள்ள SIR -க்கு எதிரான கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.

ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் பிபிசி உலகசேவை ஆசிரியர், லண்டன்கட்டு... மேலும் பார்க்க

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய ... மேலும் பார்க்க