செய்திகள் :

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு தற்போது இந்த ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்த மேம்பாலப் பணியில் 15 சதவீதம் கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சிவகாசி மாநகராட்சியிலும் ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

சிவகாசியின் நீண்ட கால பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குறிப்பாக திருத்தங்கல் - சிவகாசி சாலை மற்றும் சாட்சியாபுரம் சாலை என இரண்டு ரயில்வே கிராசிங்குகள் மிகப்பெரிய போக்குவரத்து பிரச்னையாக இருந்து வருகிறது. இதில் சாட்சியாபுரம் சாலை ரயில்வே மேம்பாலம் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படவே கிடப்பில் போடப்பட்ட இந்தப் பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த மேம்பாலப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் பிபிசி உலகசேவை ஆசிரியர், லண்டன்கட்டு... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கட... மேலும் பார்க்க

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய ... மேலும் பார்க்க