செய்திகள் :

ஹோட்டலில் ரூ.10,900-க்கு சாப்பிட்டு, பின்வாசல் வழியாக ஓட்டம்; சுற்றுலா பயணத்தில் சிக்கிய 5 பேர்

post image

பணம் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பிச் செல்வதை படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் 5 பேர் ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு அருகிலுள்ள சியாவா என்ற இடத்தில் உள்ள ‘ஹேப்பி டே’ ஹோட்டலுக்கு 5 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தனர். அவர்கள் அனைத்து வகையான உணவையும் ஆர்டர் செய்து போதிய அளவு வயிறு முட்ட சாப்பிட்டனர். வெயிட்டர் அவர்கள் கேட்ட உணவுகளை கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கத் தொடங்கினர்.

அப்போதுதான் அவர்கள் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கினர். ஒவ்வொருவராக அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர்.

ஹோட்டலில் சாப்பிட்ட சுற்றுலா பயணிகள்
ஹோட்டலில் சாப்பிட்ட சுற்றுலா பயணிகள்

ஆனால் அப்படி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அதற்குள் அடுத்தவரும் இதே போன்று “ரெஸ்ட்ரூம் சென்று வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு சென்றார். இதை கவனித்த வெயிட்டர் உடனே ஹோட்டல் உரிமையாளரை எச்சரித்தார். அதற்குள் அனைவரும் ரெஸ்ட்ரூம் செல்வதாக கூறிவிட்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றிருந்தனர்.

அவர்கள் மொத்தம் ரூ.10,900 அளவிற்கு சாப்பிட்டிருந்தனர். பணத்தை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றனர். உடனே ஹோட்டலுக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஹோட்டல் உரிமையாளர் ஆய்வு செய்தபோது, சாப்பிட்ட 5 பேரும் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்தது.

உடனே ஹோட்டல் உரிமையாளர் வேறு ஒரு காரில் ஏறி அவர்களை விரட்டிச் சென்றார். அதோடு இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.

பணம் கொடுக்காமல் தப்பிய சுற்றுலா பயணிகள்

இதனால் போலீஸாரும் சேர்ந்து விரட்டத் தொடங்கினர். அவர்கள் சென்ற கார் குஜராத் நோக்கி சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர்களது கார் அங்கிருந்து நகர முடியவில்லை. போலீஸாரும், ஹோட்டல் உரிமையாளரும் சேர்ந்து 5 பேரையும் பிடித்துக்கொண்டனர்.

அவர்கள் 5 பேரும் குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தெரியவந்தது. அவர்களிடம் சாப்பிட பணம் இல்லாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டதால் தங்களது நண்பர் ஒருவருக்கு போன் செய்து பணத்தை ஜீபே மூலம் அனுப்பச் சொன்னார்கள். அவரும் பணத்தை அனுப்பிவைத்தார். அதன் பிறகு 5 பேரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க

பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

போலி ஈனோ தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது - வெளியான அதிர்ச்சித் தகவல்

டெல்லியில் போலி ஈனோ தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில் 91,000-க்கும் மேற்பட்ட போலி ஈனோ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி... மேலும் பார்க்க

Ukraine: உக்ரைனில் நீல நிறத்தில் மாறிய நாய்கள்; அதிர்ச்சியில் மக்கள்; காரணம் என்ன?

உக்ரைனின் செர்னோபில் நாய்கள் நீல நிறமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.உக்ரைனின் செர்னோபில் என்ற பகுதியில் அணு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. 1986ம் ஆண்டு அங்கு மிக மோசமான ஒரு அணு கசிவு... மேலும் பார்க்க

மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z-யினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.உடல் நலன், நிதி பாதுகாப்பு மற்றும் மனநலன் போன்ற காரணங்க... மேலும் பார்க்க

வைரலாகும் டைசன் : கழுத்தில் தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!

நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய் அனைவரது கவனத்தையும... மேலும் பார்க்க